ராமேசுவரம், மண்டபத்தில் நாளை மின்தடை

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மாதாந்திர பரமரிப்பு பணிகளுக்காக திங்கள்கிழமை (செப்.17) மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம்


ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மாதாந்திர பரமரிப்பு பணிகளுக்காக திங்கள்கிழமை (செப்.17) மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் துணைக் கோட்ட உதவி செயற்பொறியாளர் எம்.சந்திரசூடன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com