ஊட்டச்சத்து  விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அருகே விளாத்தி கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் அருகே விளாத்தி கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை  திருக்கம்மாள் தலைமை வகித்தார்.  முக்கிய வீதிகளில் மாணவர்கள் பாததைகளை கையில் ஏந்திக்கொண்டு பேரணியாக சென்றனர்.  அதே போன்று எம் கரிசல்குளம் ஊராட்சி  நடுநிலைப் பள்ளி சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆர். வீரமாளி  தலைமை வகித்தார். இந்த விழாவில்  மக்கள் முனைப்பு இயக்க பேரணி நடத்தப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியைகள் கலைச்செல்வி , பிரின்சிலியா , ஆரோக்கிய ஜெரோபிஸ், விம்மலிட்டா , ரெஜிலா மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com