காரைக்குடி கல்லூரி விழா: ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பங்கேற்பு

காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு மையத்தை ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு மையத்தை ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

கல்லூரியின் 1987-1991 பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 58 லட்சம் செலவில் மையத்தை புதுப்பித்துள்ளனர். இக்கல்லூரியில் பயின்று 25 ஆண்டுகள் நிறைவுற்றதை வெள்ளிவிழாவாக முன்னாள் மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட வேலை வாய்ப்பு மையத்தைத் திறந்து வைத்தார். விழாவில் அவர் வரலாற்றுச்சுவடுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் எஸ். ராஜகுமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் இளங்கோ, முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் ஆர். சக்திவேல் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com