காரைக்குடி ஸ்ரீ பாரிசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி பாரிநகர் அருள்மிகு ஸ்ரீ பாரிசித்தி விநாயகர்கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்குடி ஸ்ரீ பாரிசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி பாரிநகர் அருள்மிகு ஸ்ரீ பாரிசித்தி விநாயகர்கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் சுற்றுப்பிரகார மண்டபம், கோயில் முகப்பு புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலையில் நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுற்று, காலை 10.55 மணிக்கு விமானம்,மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகாஅபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற யாகசாலை பூஜைகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர். ராமசாமி, பேராசிரியர் அய்க்கண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ., பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் மற்றும் எஸ். கணேச குருக்கள், எஸ். மணிகண்ட குருக்கள் மற்றும் பாரிநகர் பொது மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழாக்குழுவினர் மற்றும் பாரிநகர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com