சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளன.
திருப்புவனம் அருகே கழுகர்கடை விலக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தமிழ்மணி (60). இவர், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்துள்ளார். இதையறிந்த மர்ம நபர்கள், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனர்.
வீடு திரும்பிய தமிழ்மணி, பீரோவிலிருந்த நகைகள் திருடப்பட்டதை அறிந்துள்ளார். இச் சம்பவம் குறித்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.