காரைக்குடி கழனிவாசல் குரூப் பகுதியில் நீர் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.
காரைக்குடி நகராட்சி 1ஆவது வார்டில் கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து செல்லஞ்செட்டி ஊரணி செல்லும் பகுதியில் 7 வீடுகள் மற்றும் வணிகத் தொடர்புடைய சுவர் வரத்துக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர் நாகநாதன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.