இளையான்குடியில் வியாழக்கிழமை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள், தலித்துகள் கொலை செய்யப்படும் சம்பவங்களைக் கண்டித்து இந்த பிரசாரம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஹாலிக் தலைமை வகித்தார். மாநில வழக்குரைஞர் அணித் தலைவர் அப்பாஸ், திமுக நகர்த் தலைவர் நஜூமுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவர் ஜலால்தீன், ஆதி தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் திருமுருகசெல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.