சிவகங்கை அருகேயுள்ள கொட்டகுடி அய்யனார் கோயில் ஊருணி தூர்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குடிமராமத்து திட்டத்தின்கீழ் சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளர் சங்கத்தினர் இப்பணியை மேற்கொள்கின்றனர். தூர்வாரும் பணியை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ தொடக்கி வைத்தார். சிவகங்கை கோட்டாட்சியர் என்.சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் கே.நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம உதவியாளர் அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் வி.மாரி, சிவகங்கை வட்டத் தலைவர் செல்வக்குமரன், துணைத் தலைவர் அழகர், வட்டச் செயலர் ரமேஷ், துணைச் செயலர் சுருளிபாண்டி, பொருளாளர் கார்த்திகைராஜா, துணைப் பொருளாளர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.