மானாமதுரை அருகே வியாழக்கிழமை வடமாநில பக்தர்கர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த 10 பேர் காயமுற்றனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் காரில் ராமேஸ்வரம் சென்றனர். மானாமதுரை அருகே முத்தனேந்தல் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக வடமாநிலத்தவர்கள் வந்த காரின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது சாலையில் நடந்து சென்ற அன்னியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சோணை என்பவர் மீது கார் மோதியது. இதில் சோனை உயிரிழந்தார். இவ்விபத்தில் கார் கவிழ்ந்ததால் அதில் வந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.