காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் இணைய வழி ஆய்வகம் என்ற தலைப்பிலான பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கொல்லம் அமிர்தா பல்கலைக்கழக இணைய வழி ஆய்வகம் ஆகியவற்றின் சார்பில் இப்பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசினார்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் கே. குருநாதன், பல்கலைக் கழக மாணவர் நலன் முதன்மையர் வி.பழனிச்சாமிஆகியோர் வாழ்த்திப்பேசினர். கொல்லம் அமிர்தா பல்கலைக்கழக திட்ட மேலாளர் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் சனீஸ், இணை ஆய்வக அலுவலர் வைசக்கனிக்கொழில் ஆகியோர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஆய்வகப் பயிற்சியை வழங்கினர். முன்னதாக பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் சி. பாஸ்கரன் வரவேற்றார். முடிவில் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ஜி. ராமலிங்கம் நன்றி கூறினார்.