சிவகங்கை ஆயுதப்படை காவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விசேஷ அலங்காரத்துக்குப் பின்னர் தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெற்ற சுமங்கலி பூஜையில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இரவு கோயில் முன்பு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். இவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.