அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி,  அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி,  அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
   அதிமுக சார்பில் அதன் நகரச்செயலாளர் சோ. மெய்யப்பன், முன்னாள் எம்.எம்.ஏ கற்பகம் இளங்கோ மற்றும் கட்சியினரும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், முன்னாள் நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை, திமுக நகரச்செயலாளர் குணசேகரன் மற்றும் கட்சியினரும் அம்பேத்கர் சிலைக்கு 
மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் அதன் மாவட்டத்தலைவர் ச. அரங்கசாமி, தி.க மாநில செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் மாவட்டச்செயலாளர் சங்கு உதயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சாத்தையா மற்றும் கட்சியினரும் அம்பேத்கர் ஐக்கிய நாடுகள் சபை சங்க நிர்வாகிகளும்  அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com