சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை (டிச. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மானாமதுரை, சிப்காட், கட்டிக்குளம், முத்தனேந்தல், ராஜகம்பீரம், மிளகனூர், குறிச்சி, தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.