சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், இலவச பால் தர பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் காரைக்குடி நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பரிசோதனை முகாமில், காரைக்குடி நகர் பகுதி பொதுமக்கள், சாக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாமுக்கு வந்திருந்தபொதுமக்கள் 300 மி.லி.அளவு கொண்ட பாலை புட்டியில் அடைத்து எடுத்து வந்திருந்தனர். அதனை, நவீன கருவியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் பரிசோதனை செய்தனர். கருவியில் காட்டும் பால் தரம் குறித்து அளவீடுகளின் முடிவுகளை உடனடியாக பொதுமக்களிடம் வழங்கினர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி முதல் இம்முகாம் தொடங்கப்பட்டு, பல்வேறு நகரங்களிலும் நடத்தப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.