திருப்பத்தூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மஞ்சுவிரட்டு பாதுகாப்புப் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நெடுமறம் இளங்கோ தலைமை வகித்தார்.
பேரவை நிர்வாகி பெரியய்யா முன்னிலை வகித்தார். ஆறுமுகம் சேதுராமன் வரவேற்றார்.
தமிழர் தேசிய முன்னணி மாநிலச் செயலர் லெ.மாறன், வழக்குரைஞர் பிரிவு எழிலரசு மற்றும் தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இமயம் சரவணன், இந்திய கம்யூ, கட்சியின் தாலுகா செயலர் கல்பனா ஆகியோர்சிறப்புரையாற்றினர். யாசின் நன்றி கூறினார்.