சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் சார்பில் இந்திய தொழில் திறன் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ தலைமை வகித்தார்.கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில்,தொழில் துறை சம்பந்தமாக கட்டுரை,பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசும்,பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சுய தொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள்வரவேற்றார். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வர் எல்,தர்மராஜ், பயிற்றுநர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் என்.நாகராஜன் நன்றி கூறினார்.