தேவகோட்டை நகர வாரச் சந்தையில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
தேவகோட்டை நகரில் ஐந்து லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இங்கு வாரச்சந்தையில்
ஞாயிற்றுக்கிழமை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் வந்து செல்வர். இந்த வாரச்சந்தையில் காய்கறி சந்தை ஒரு பகுதியிலும், மீன் சந்தை மற்றொரு பகுதியிலும் இயங்கி வருகிறது. சந்தையில் விற்கப்படும் மீன்களை நறுக்கி சுத்தம் செய்ய தொழிலாளர்கள் அங்கேயே இருக்கின்றனர். இந்த மீன்களின் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகளை நகராட்சி மறுநாள் சுத்தம் செய்வதில்லை.
இதனால் அந்தபகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே உடனடியாக மீன் கழிவுகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.