சிவகங்கை மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
         இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி விவரம்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் அந்தந்த வருவாய் கோட்டத்துக்குள்பட்ட கிராம மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா, வருமானச் சான்றிதழ், பிறப்பு,இறப்புச் சான்றிதழ், சமூக நலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.
 முகாம் நடைபெறும் இடங்கள்: சிவகங்கை வட்டம் கத்தப்பட்டு, காரைக்குடி வட்டம் சின்னவடகுடிபட்டி, திருப்புவனம் வட்டம் பழையனூர், தேவகோட்டை வட்டம் குறுந்தூர், மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணி, திருப்பத்தூர் வட்டம் மணவாக்கிப்பட்டி, இளையான்குடி வட்டம் நன்னியாவூர், காளையார்கோவில் வட்டம் கோ.மருதங்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com