காரைக்குடியில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்சவம்

காரைக்குடி ஸ்ரீ சங்கர மணி மண்டபத்தில் 8-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி ஸ்ரீ சங்கர மணி மண்டபத்தில் 8-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   நிகழ்ச்சியையொட்டி, சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை அஷ்டபதி பஜனையும், இரவு திவ்யநாம பஜனையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் உஞ்சவ்ருத்தி
பஜனையும், மதியம் ஸ்ரீ ராதா கல்யாண வைபவமும் நடைபெற்றது.   பஜனை மற்றும் கல்யாண மஹோத்சவம், காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான் கே. கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவதர்களால் நடத்தப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மதியம் ஆஞ்சநேயர் உத்சவம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வை. சிவகுமார், வை. சந்திரசேகரன் சகோதர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com