காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுவயல், சாக்கவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் காரைக்குடி கோட்டச் செயற்பொறியாளர் சித்தி அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.