வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் விஷம் குடித்து தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    திருப்பாச்சேத்தி அருகே டி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலஹாசன். இவருக்குத் திருமணமாகி இளவரசி (34) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
 துபை நாட்டில் வேலை பார்த்து வந்த கமலஹாசன், அங்கிருந்து கடந்த 10 ஆம் தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஊருக்கு அருகே வந்ததும் காருக்குள்ளேயே விஷம் குடித்தார்.
   உடனே, அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து, திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com