ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர் கைது

திருப்புவனம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்புவனம் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
  திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). ஆட்டோ ஓட்டுநரான இவரது ஆட்டோவில் பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், இவரது மகன் அழகுசுந்தரம், அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் ஏறி கிராமத்துக்கு சென்றுள்ளனர். அங்கு பணம் கொடுக்க மறுத்து அவர்கள் முருகனுடன் தகராறு செய்துள்ளனர்.
  பின்னர் முருகனின் வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  புகாரின்பேரில் பூவந்தி காவல் நிலைய போலீஸார் தெய்வேந்திரன், அழகுசுந்தரம், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com