காரைக்குடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தந்தையர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமை வகித்தார். பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் தந்தையர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாணவர் தீபக் வரவேற்றார். எட்டாம் வகுப்பு அ பிரிவு மாணவர்கள் அவர் களின் தந்தையைப் பற்றி கவிதைகள் கூறி, பாடல்கள் பாடினர். தமது தந்தைக்கு பொன்னாடை போற்றியும், பரிசு கொடுத்தும் கெளரவித்தனர். மாணவி தீபிகா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி செய்திருந்தார்.