நகரகுடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சரிவர இயங்காததால் அதனை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி அருகே உள்ள நகரகுடி, லூர்துநகர், உலகமணியேந்தல், லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500 மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்குள்ள மின்மாற்றி சரிவர இயங்காததாலும்,உயரழுத்த மின் கம்பிகள் பழுதானதாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே இந்த மின் மாற்றி, உயர் அழுத்த மின் கம்பி ஆகியவற்றை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.