அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அவசரத் தேவைக்காக புதன்கிழமை ரத்ததானம் வழங்கிய அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அவசரமாக ரத்தம் தேவைபட்டது. இதற்காக ராஜராஜன் பொறியியல் கல்லூரியிலிருந்து மருத்துவமனைக்குச் சென்று 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். அவர்கள் வழங்கிய ரத்தம் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு உயிர்காக்கப்பட்டது.இதற்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நாகசுப்பிரமணியன், பேராசிரியர் பாபு ஆகியோர் மாணவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர். இதையடுத்து ரத்ததானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் அ. குமாரவடிவேல், துணை முதல்வர் ஹாயாசிந்த் சுகந்தி ஆகியோர் பாராட்டினர்.