காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக வன நாள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பி.செல்லப்பா தலைமை வகித்துப் பேசினார். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் சி.கஸ்தூரி வரவேற்றார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் ஜி.ஜானகிராமன் நன்றி கூறினார்.