சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக் கிராமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பால்குட உற்சவம் நடைபெற்றது.
இக் கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு காப்புகட்டி விரதம் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்காவடி எடுத்தும், வேல்காவடி சுமந்தும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சாலைக்கிராம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.