சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த திருவிழாவைத் தொடர்ந்து 10 நாள்கள் தினமும் அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 28ஆம் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது. அப்போது. காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள் தீச்சட்டி, அக்னிச்சட்டி, ஆயிரங்கண்பானை சுமந்து கோயிலுக்கு வந்து நேர்ச்சை செலுத்துவார்கள்.