மானாமதுரையில் மார்ச் 30-இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மானாமதுரையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் மார்ச் 30-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.

மானாமதுரையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் மார்ச் 30-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மானாமதுரை வட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் (மார்ச் 30) வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அந்த வட்டத்திற்குள்பட்ட எரிவாயு பயனாளர்கள் சிலிண்டர்கள் நிரப்புதலில் குறைபாடு, எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம் செய்தல், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தல் மற்றும் முகவர் மாற்றம் உள்ளிட்ட குறைகளை மனு மூலம் அளித்து தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com