எச்.ஐ.வி. நோயால் இறந்தவர்களுக்கு அஞ்சலி

எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு, சிவகங்கை மாவட்ட நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு, சிவகங்கை மாவட்ட நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி மெழுகுவர்த்தி ஏற்றி தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் கலந்துகொண்ட எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
   இதில், இணை இயக்குநர் (நலப் பணிகள்) விஜயன்மதமடக்கி, துணை இயக்குநர்கள் யசோதாமணி, ராமபாண்டியன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் செளந்தரராஜன், சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com