சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றமைக்கு, பள்ளி நிறுவனர் ஏ.டி. விக்டர், பள்ளி முதல்வரும், தாளாளருமான ரூபன் ஆகியோர் மாணவ, மாணவியரை பாராட்டினர். இப்பள்ளியில், எஸ். ஆப்ரின் ரிபானா என்ற மாணவியும், எஸ். ஹரிராமகிருஷ்ணன் என்ற மாணவரும் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், 5 மாணவர்கள் 490 மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும், 10 மாணவர்கள் 480-க்கும் அதிகமாகவும், 60 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும் பெற்றுள்ளனர். இவர்களில் 10 மாணவர்கள் கணிதத்திலும், 12 மாணவர்கள் அறிவியலிலும், 17 மாணவர்கள் சமூக அறிவியலிலும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் வாழ்த்தி பாராட்டினர்.