100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். திருப்புவனம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம். கந்தசாமி, ஒன்றியச் செயலர் ஜெயராமன், நகரச் செயலர் ஈஸ்வரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் பழனிவேல் மற்றும் பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com