சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சுந்தரபுரம் தெருவிலுள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சுந்தரபுரம் தெருவிலுள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் வளர்த்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பின்னர், சுந்தர விநாயகருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகப் பெருமான் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுந்தர விநாயகரை தரிசனம் செய்தனர்.
மதியம் கோயிலில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com