துபையில் இறந்த தனது மகனின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை தந்தை மனு அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த நாச்சி அம்பலம் என்பவர் அந்த மனுவில் கூறியிருப்பது: எனது மகன் பொன்முனியன் (24) கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துபையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றார். இந்நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி எனது மகன் பொன்முனியன் திடீரென்று இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதைக் கவனத்தில் கொண்டு, இறந்த எனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.