சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு முறைப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கம்புணரி பேரூராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் செயல் அலுவலரின் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அடிப்படை வசதி செய்துகொடுப்பது தொடர்பாக தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் அரசால் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆகையால், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு உரிமையாளர்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்.20-ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள நகர் மற்றும் மனைப்பிரிவு வரைபட நகல் ஆகியவற்றுடன் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.