சிவகங்கையில் தேசிய நூலக வார விழா

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட  மைய நூலகத்தில் 50 ஆவது தேசிய நூலக வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட  மைய நூலகத்தில் 50 ஆவது தேசிய நூலக வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தின் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் தேவகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தார். ஆக்ஸ்வர்ட்  பள்ளியின் தாளாளர் சியமளா வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், ஆசிரியர்கள் மருதுபாண்டியன், தெய்வேந்திரன் ஆகியோர் நூல்கள் குறித்துப் பேசினர். முனைவர் தேனப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களின் தன்மை குறித்தும், அவற்றை படிப்பதானல் ஏற்படும் பலன்கள் குறித்தும் பேசினார்.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com