தேவகோட்டை, கண்ணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 22) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் சித்தி அப்துல் காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேவகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேவகோட்டை, கண்ணங்குடி, அனுமந்தக்குடி, மங்களம், உஞ்சனை, புளியால், ஆறாவயல், வேப்பங்குளம், காரை, பாவனக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.