சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் கணித கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, கணித விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், கணிதவியல் இணைப் பேராசிரியர் மனோகரன், உதவிப் பேராசிரியர் ஜாகீர்உசேன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கணிதத் துறைத் தலைவர் ஏ. காதர்ஒலி வரவேற்றார்.