உலக சதுரங்கப் போட்டி: தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா

உலக சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பிரனேஷுக்கு புதன்கிழமை அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

உலக சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பிரனேஷுக்கு புதன்கிழமை அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
     சீனாவில், கடந்த செப்டம்பர் 27 முதல் 29 வரை உலகப் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கக் குழு போட்டி நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் பிரனேஷ் தங்கம் வென்றுள்ளார்.     மாணவர் பிரனேஷுக்கு, பள்ளியின் சார்பில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. அதில், பள்ளிக் குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் மற்றும் முதல்வர் ஆர். சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் என பலரும் பாராட்டி வாழ்த்தினர்.     முன்னதாக, போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவரை, பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மாணவருக்கு கிரீடம் அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com