பள்ளி தலைமை ஆசிரியருக்கு முதன்மை சிற்பி விருது

முதன்மை சிற்பி விருது பெற்ற,  சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீஅச்சுனாந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை

முதன்மை சிற்பி விருது பெற்ற,  சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீஅச்சுனாந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை செ. சாந்திக்கு, அப்பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
      தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முதன்மை சிற்பிகள் விருதானது, கல்விச் சாதனையாளர்களுக்கு வழங்கபட்டு வருகிறது.
    இந்த ஆண்டுக்கான விருதினை, பிள்ளையார்பட்டி ஸ்ரீ அச்சுனாந்தா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியை செ. சாந்தி பெற்றுள்ளார். இதனைப் பாராட்டி, அப்பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும், அண்ணல் காந்தி மற்றும் அமரர் ஜீவா நினைவுக் குழுவினரும் அவரை கெளரவித்துப் பாராட்டினர்.
    பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வாழ்த்துரை வழங்கினார். அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக் குழுத் தலைவர் க.திருநாவுக்கரசு சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.
    இவ்விழாவில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com