சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற இப்பணியின்போது, செயல் அலுவலர் செல்வி தலைமையில், அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில், ரூ. 16,04,742 ரொக்கமும், 248 கிராம் தங்கமும், 105 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில், கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.