காளையார்கோவில் துணை மின் நிலைய பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மின் பகிர்மானத்தின் கோட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மு.சிவலிங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூர், கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, சருகணி மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.