பாலத்தில் கார் மோதி விபத்து: மதுரையைச் சேர்ந்தவர் பலி

மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (74). இவரும், இவரது மகன்கள் அழகப்பன் (42), ராமநாதன் (40) ஆகிய மூவரும் புதன்கிழமை

மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (74). இவரும், இவரது மகன்கள் அழகப்பன் (42), ராமநாதன் (40) ஆகிய மூவரும் புதன்கிழமை இரவு காரைக்குடி அருகே உள்ள கண்டனூரிலிருந்து திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சோழபுரம் அருகே உள்ள பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த முத்துக்கருப்பன், அழகப்பன் ஆகியோரை சிவகங்கை போலீஸார் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com