அழகப்பா அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஹெரிடேஜ் சுழற் சங்கம் சார்பில், ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ஹெரிடேஜ் சுழற் சங்கம் சார்பில், ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சியில், காரைக்குடி ஹெரிடேஜ் சுழற் சங்கத்தின் தலைவர் கோ. பஞ்சாச்சாரம் தலைமை வகித்தார். சுழற்சங்க நிர்வாகி வழக்குரைஞர் ரவிச்சந்திர ராமவன்னி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துப் பேசினார். கல்லூரியின் முதல்வர் சி. முத்தம்மை வாழ்த்திப் பேசினார்.
    பின்னர் நடைபெற்ற ரத்த தான முகாமில், மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். காரைக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். நிகழ்ச்சியில், ஹெரிடேஜ் சுழற் சங்கச் செயலர் எஸ்.கே.சி. மணி, சுழற் சங்க முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com