கட்டுரைப் போட்டி: இளையான்குடி கல்லூரி மாணவிக்கு பரிசு

சிவகங்கை மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி மாணவி பரிசு வென்றார்.

சிவகங்கை மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி மாணவி பரிசு வென்றார்.
சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி சே.சரண்யா இப்போட்டியில் கலந்து கொண்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். இவரது கட்டுரை மூன்றாவது பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இளையான்குடி கல்லூரி பேராசிரியர்கள் அப்துல்ரகீம், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவியை இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி நிர்வாகச் செயலாளர் ஜபருல்லாகான், முதல்வர் அப்பாஸ்மந்திரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com