சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் வணிக ரீதியான மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்து வீட்டிற்குத் தேவையான கீரைகள், கருவேப்பிலை, முருங்கை, கத்தரி, வெண்டை, மற்றும் மூலிகைச் செடிகள் வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியினை உழவர் பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமார், முதுகலை வேளாண்மை ஆசிரியர் ஞானஒளிவேல் ஆகியோர் பயிற்சி அளித்து, செய்முறை விளக்கமும் செய்து காட்டினர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.