காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : இக்கூட்டம், காரைக்குடியில் உள்ள துணை மின்நிலைய அலுவலகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில், காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு, மின்சார வாரியம் தொடர்பான தங்களது புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை, விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.