சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி: காரைக்குடி, சென்னை அணிகள் வெற்றி

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி நடத்திய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கிளஸ்டர்-4 கால்பந்துப் போட்டியில்

காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி நடத்திய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கிடையேயான கிளஸ்டர்-4 கால்பந்துப் போட்டியில், 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி அணியும், 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் சென்னை செயின்ட் ஜோசப் பள்ளி அணியும் வெற்றி பெற்றன.
     ஆண்டுதோறும் தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநிலங்களைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் கால்பந்து போட்டி,  இந்த ஆண்டு காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 17 மற்றும் 19 வயதுக்குள் பட்டோர் பிரிவுகளில் செப்டம்பர் 18  முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.
     இறுதிப் போட்டிகளில் 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில், சென்னை செயின்ட் ஜோசப் அணியும், வேலம் மாள் சர்வதேசப் பள்ளி அணியும் மோதின. இதில், சென்னை செயின்ட் ஜோசப் அணி வென்றது. அதேபோல், 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி அணியும், ஊட்டி லாரன்ஸ் பள்ளி அணியும் மோதியதில், செட்டிநாடு பப்ளிக் பள்ளி அணி வென்றது.
    இதன் நிறைவு விழா, வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில், அகில இந்திய கால்பந்து கழகத்தின் முன்னாள் கேப்டன் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார். இந்த விழாவில், பள்ளியின் தலைவர் செல்லப்பன், தாளாளர் செ. சத்தியன், முதல்வர் சிவக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com