சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மகாசபைக் கூட்டம், காரைக்குடி அகத்தியன் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் வீ. சண்முகம் தலைமை வகித்தார். பொது மேலாளர் ஆ. முருகாநிதி முன்னிலை வகித்தார்.
இதில், பால்வளத் துறை துணைப் பதிவாளர் ராமநாதபுரம் மற்றும் மானாமதுரை எஸ். கணேசன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணைய துணைப் பொதுமேலாளர் பி.எஸ். சுந்தரமகாலிங்கம், ஒன்றிய துணைத் தலைவர் வீ. நாகராஜன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத் தியாளர்கள் சங்கத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் போது, நுகர்வோர்களுக்கு விற்க தரமான ஆவின் தயிர் 200 கிராம் புதிய பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை, நிர்வாக மேலாளர் கே. சங்கரன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.