ஐயப்பன் கோயிலில் விழா

மானாமது ரை கல்குறிச்சி பகுதி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இருமுடி விழா மற்றும் அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மானாமது ரை கல்குறிச்சி பகுதி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இருமுடி விழா மற்றும் அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்குறிச்சி பகுதியில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இக் கோயிலில் நடந்த இருமுடி விழாவை முன்னிட்டு சித்திரை விஷூவுக்கு சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் கோயிலில் இருமுடி கட்டப்பட்டது.
அதன்பின் ஐயப்பன் உருவப்படத்துக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து கோயிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com